ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

நடிகை ரம்பா சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். கனடாவில் வசித்தவர் இப்போது சினிமாவில் நடிக்க வேண்டும். படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துவிட்டார் என தகவல். ரம்பா பட கம்பெனியில் நடிக்க, படம் இயக்க, பணியாற்ற பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், ரம்பாவின் கணவருக்கு சில ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இன்றைய சினிமா மோசமாக இருக்கிறது. படம் தயாரிப்பது ரிஸ்க். உங்க அண்ணன் கூட படம் தயாரித்துதான் கடனாளி ஆனார். ஆகவே, கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும் அவர் நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்கிறார்களாம். ஜோதிகா, சிம்ரன் மாதிரி ரீ-என்ட்ரி ஆக வேண்டும். பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ரம்பா மனதில் இருக்கிறதாம். இதற்கிடையில் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருக்கிறார் ரம்பா.