'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

ஆந்திராவை சேர்ந்த யேடி விஜயலட்சுமி, 'ரம்பா' என்ற பெயருடன் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்த அவர் 1983ம் ஆண்டில் 'உழவன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார். இந்த படத்தில் தொடை காட்டி நடித்ததால் தொடை அழகி என்று வர்ணிக்கப்பட்டார். அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டு செட்டிலானார். தற்போது அவர் 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இடையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார்.
இதற்காக தனி போட்டோஷூட் நடத்தி உள்ள ரம்பா புதிய கால்ஷீட் மானேஜரையும் நியமித்து வாய்ப்பு தேடத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது "சினிமா எப்போதுமே எனது முதல் காதல், மீண்டும் வந்து ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் பாத்திரங்களை ஏற்று நடிக்க இதுதான் சரியான நேரம் என்று உணர்கிறேன். புதிய பரிமாணங்களை ஆராய்ந்து பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் என்னை இணைக்க அனுமதிக்கும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்" என்கிறார் ரம்பா.




