சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலப் பிரச்னையால் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் அதன்பின் தொடர்ச்சியாக அவரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா, தற்போது சென்னை வந்துள்ளார். தனது கணவர் இந்திரகுமார் உடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரம்பா, ‛‛கேப்டன் விஜயகாந்த் இறந்த சமயம் என்னால் வர முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மளை விட்டு போவார் என நினைக்கவில்லை. மிகவும் நல்ல மனிதர், படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். அவர் உயிரோடு இருக்கும்போது ஏன் நான் அவரை வந்து பார்க்கவில்லை என்ற கவலை மட்டுமே எனக்கு உள்ளது. இந்த கவலை காலத்திற்கும் இருக்கும். என் கணவருக்கு மிகவும் பிடித்த நடிகர். விஜயகாந்த் சார் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்'' என்றார்.




