'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உத்தரப் பிரதேச மாநில போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்கள் .
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது மட்டுமின்றி நொய்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து என கூறி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 11 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்ததில் ஒருவர் கானா நாட்டை சேர்ந்தவர் மற்றும் இருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து சிம் கார்டு, லேப்டாப் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி கும்பல் இவை தவிர போலியான மேட்ரிமோனி வெப்சைட், டேட்டிங் வெப்சைட் என மேலும் பல போலியான வெப்சைட்கள் மூலம் மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது .