25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உத்தரப் பிரதேச மாநில போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்கள் .
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது மட்டுமின்றி நொய்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து என கூறி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 11 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்ததில் ஒருவர் கானா நாட்டை சேர்ந்தவர் மற்றும் இருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து சிம் கார்டு, லேப்டாப் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி கும்பல் இவை தவிர போலியான மேட்ரிமோனி வெப்சைட், டேட்டிங் வெப்சைட் என மேலும் பல போலியான வெப்சைட்கள் மூலம் மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது .