ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

இந்திய சினிமாவின் அடையாளமாக சின்னமாக கருதப்படுகிறவர் அமிதாப் பச்சன். 80 வயதை எட்டி உள்ள இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். ஆனாலும் ஹிந்தி தொலைக்காட்சிகள் அமிதாப்பை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. இதுகுறித்து பலரும் இதுபோன்ற ஆளுமைகளை கேலி பொருளாக்காதீர்கள் என் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் கண் முன்பே அப்படி ஒரு அவலம் அரங்கேறியதால் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அபிஷேக் பச்சன் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அபிஷேக் பச்சன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்தார்.
இதனால் கோபமான அபிஷேக் பச்சன், ''நிறுத்துங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லது அல்ல'' என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவம் அமிதாப் மற்றும் அபிஷேக் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.