'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார். பாலிவுட்டில் பெரிய படங்கள் வெளியானாலும் தென்னிந்திய மொழியில் உருவாகி பாலிவுட்டில் ரிலீசாகும் படங்களானாலும் அதை அங்கு வெளியிடுபவராகவோ அல்லது தனது காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சி மூலமாக புரமோசன் பண்ணுபவராகவோ என ஏதோ ஒரு வகையில் அவரும் அந்த படங்களுடன் இணைந்து இருப்பார்.
அதே சமயம் தனது காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சி மூலம் தனக்கு வேண்டிய நட்சத்திரங்களை குறிப்பாக ஆலியா பட், ரன்பீர் கபூர் போன்றவர்களை உயர்த்தி பிடித்து நெபோடிசத்துகு ஆதரவாகவும் தனக்கு விருப்பம் இல்லாத நபர்களை மட்டும் தட்டுவதற்கும் அந்த ஷோவை பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே அவர் மீது இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்மறை கருத்துக்கள் நிறைய வந்தவண்ணம் இருந்தன.
இன்னும் ஒருபடி மேலாக அவர் தயாரிக்கும் படங்களுக்கோ வெளியிடும் படங்களுக்கோ ஆதரவு கொடுக்க வேண்டாம் என கூறி பாய்காட் செய்யும் புதிய டிரெண்ட்டும் சமீபகாலமாக பாலிவுட்டில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில்தான் டுவிட்டரை விட்டு தான் வெளியேறுவதாக அறிவித்து குட்பை சொல்லி உள்ளார் கரண் ஜோஹர். இதுகுறித்து அவர் கூறும்போது பாசிட்டிவ் எனர்ஜிக்கான இடம் நிறைய தேவைப்படுவதால் டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளார்.