'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த நிலையில் இந்த படம் இதே பெயரில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி உள்ளனர் இன்று (செப்-3௦) இந்த படம் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான புஷ்கரிடம், பொன்னியின் செல்வன் படமும் இதே தேதியில் ரிலீஸ் ஆகிறது அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரிய படம்.. அதை எங்களால் பீட் பண்ண முடியாது. நாங்கள் அனைவரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப் போகிறோம். எப்படியும் சனி ஞாயிறுகளில் எங்கள் படத்திற்கு கூட்டம் நிச்சயம் வரும் என்று கூறினார்.
அவர் நாங்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தை இணைந்து பார்ப்போம் என்று சொன்னபோது ஹிருத்திக் ரோஷனின் முகம் சட்டென மாறி புஷ்கரை திரும்பி டென்சனுடன் ஒரு பார்வை பார்த்தார்.. அதன்பிறகு ஹிருத்திக் ரோஷன் பேசும்போது, “நான் இன்னும் அந்த நாவலைப் படிக்கவில்லை.. ஜஸ்ட் இப்போதைக்கு எனக்கு தெரிந்தது விக்ரம் வேதா மட்டும்தான்” என்று விறைப்பாக பேசியதிலிருந்து புஷ்கரின் பேச்சை அவர் ரசிக்கவில்லை என்பதை நன்றாகவே உணர முடிந்தது.