பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். சினிமாவில் எந்தளவுக்கு நடித்து சம்பாதிக்கிறாரோ, அதே அளவுக்கு விளம்பரங்கள் மூலம் கோடிகளில் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் பான் மசாலா தொடர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, எதிர்வினையாற்றி வந்தனர். இந்நிலையில் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் அக்ஷய்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த சில நாட்களாக உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினை என்னை பாதித்துள்ளது. இனி இதுமாதிரியான புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். அந்த நிறுவனத்துடனான எனது தொடர்பை முறித்துக் கொள்கிறேன். இந்த விளம்பரத்தின் மூலம் கிடைத்த பணத்தை வேறு ஏதேனும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த எண்ணி உள்ளேன். சட்டப்பூர்வ ஒப்பந்தப்படி அந்த விளம்பரம் அதற்குரிய காலம் வரை ஒளிபரப்பாகும். அதேசமயம் இனி எதிர்காலத்தில் எனது விளம்பர தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். அதற்கு பதிலாக நான் எப்போதும் உங்கள் அன்பையும், விருப்பத்தையும் கேட்கிறேன்.
இவ்வாறு அக்ஷய் தெரிவித்துள்ளார்.