ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் அமெரிக்காவில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து இந்த குழந்தைகளை விமானத்தில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார், நீண்ட தூர விமான பயணம் என்பதால் இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு சிரமப்பட்டுள்ளார். அப்போது அதே விமானத்தில் வந்த பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு குழந்தையை தான் வாங்கி வைத்துக் கொண்டு அவருக்கு உதவி செய்திருக்கிறார்.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் , நமது வாழ்க்கையில் பலர் வருவார் போவார்கள். ஆனபோதிலும் உண்மையாகவே உதவி செய்வது ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் என்னுடைய குழந்தைகளை நீண்ட நேர விமானப் பயணத்தில் ஹிருத்திக் ரோஷன் அன்போடு கவனித்துக் கொண்டார். அவருக்கு எனது நன்றி என்று சொல்லி அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.