என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
வெளிநாட்டில் இருந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் புகழ்பெற்றாலும், இதன் கண்டன்ட் உரிமம் வெளிநாட்டு நிறுவனத்திடம் உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை போன்றே இந்தியாவில் லாக்கப் என்ற நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார். இந்த நிகழ்ச்சியை கங்கனா ரணவத் தொகுத்து வழங்குகிறார்.
இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மொத்தம் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் சுதந்திரமாக சொகுசாக இருப்பார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சிறையில் இருப்பது போன்று எந்த வசதியும் இல்லாமல் இருப்பார்கள்.
சர்ச்சை நாயகியான கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் இந்நிகழ்ச்சி ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு ஐதராபாத்தை சேர்ந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. லாக்கப் டைட்டிலும், அதன் கண்டன்டும் எங்களுடையது. அதனை நாங்கள் காப்புரிமை பதிவு செய்துள்ளோம். எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.