ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் சிவக்குமார் அவர்களுக்கு...
'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பயணத்தை தொடங்கிய நீங்கள், என் கணக்கின்படி 192 திரைப்படங்களில் நடித்து சாதனை செய்துள்ளீர்கள். இன்னும் ஒரு எட்டு படங்கள் மட்டும் நடித்து விட்டு நீங்கள் ஓய்வெடுத்திருக்கலாம். '200 படங்களில் நடித்திருக்கிறார் சிவக்குமார்' என்ற சந்தோஷம், எனக்கு கிடைத்திருக்கும். பரவாயில்லை. 'தாங்கள் ஒரு சிறந்த நடிகர்' என்பதை சமூக, சரித்திர மற்றும் இதிகாசப்படங்கள் மூலம் உறுதிப்படுத்திவிட்டீர்கள். இப்போதும், உங்கள் படங்களின் மீதான ரசனை எனக்கு சற்றும் குறையவில்லை. அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும்,
'திரைப்பட வரலாற்றில் தாங்கள் தூய்மையின் உருவம்' என்பதை படித்து பூரித்து, மெய்சிலிர்த்துப் போனவர்களில் இந்த ரசிகனும் ஒருவன்.
நடிகர் மட்டுமில்லாமல், தாங்கள் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் அனைவரும் அறிந்ததே! அந்தத் துறையிலும் பல்வேறு சாதனைகளை செதுக்கி விட்டீர்கள். இந்தத் திறமைகளையெல்லாம் கடந்து, சிறந்த அறிவுரை பேச்சாளராகவும், சமீபகாலமாய் உங்களை வெளிப்படுத்தி வருகிறீர்கள். தங்களின் ஒட்டுமொத்த திறமைக்கும், படைப்புக்கும் என் பாராட்டுக்கள்! இப்படி, முத்துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் தாங்கள், ஓவியக்கலையை வளர்க்கும் விதமாக, ஒரு பள்ளி அல்லது கல்லூரியையோ; எதிர்கால திரையுலக பிரம்மாக்களை உருவாக்கிட உதவும் ஒரு நடிப்பு கல்லூரியையோ தொடங்கி நடத்த வேண்டும். 'அதற்கான தகுதி உரியவர் நீங்கள்' என்பதில், எள் மூக்கின் முனையளவும் எனக்கு ஐயமில்லை. என் போன்ற உங்கள் ரசிகர்களின் எண்ணத்தை, மனமுவந்து நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். காரணம்... உங்களிடம் கற்றுக்கொள்ள ஆவலோடு காத்திருக்கிறது இளைய தலைமுறை!