50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' |
பிரமாண்ட இயக்குனரை பொறுத்தவரை, எப்போதுமே, ஆரம்பத்தில் போடும் பட்ஜெட்டுக்குள் நிற்க மாட்டார். அதிகப்படியான நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, பட்ஜெட்டை எகிற வைத்து விடுவார். இதன் காரணமாகவே, கடைசி நேரத்தில், அவருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, முட்டிக்கொள்ளும்.
தற்போது, தெலுங்கு நடிகரை வைத்து, பிரமாண்டம் இயக்கி வரும் படத்தின் பட்ஜெட்டும், தாறுமாறாக எகிறி விட்டதாம். அதை பார்த்து, தயாரிப்பாளர், ஆரம்பத்தில் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டதாக, பிரமாண்ட இயக்குனரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கடுப்பான பிரமாண்டம், கடைசியாக படமாக்கிய மூன்று நாள் படப்பிடிப்புக்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.