திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
பிரமாண்ட இயக்குனரை பொறுத்தவரை, எப்போதுமே, ஆரம்பத்தில் போடும் பட்ஜெட்டுக்குள் நிற்க மாட்டார். அதிகப்படியான நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, பட்ஜெட்டை எகிற வைத்து விடுவார். இதன் காரணமாகவே, கடைசி நேரத்தில், அவருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, முட்டிக்கொள்ளும்.
தற்போது, தெலுங்கு நடிகரை வைத்து, பிரமாண்டம் இயக்கி வரும் படத்தின் பட்ஜெட்டும், தாறுமாறாக எகிறி விட்டதாம். அதை பார்த்து, தயாரிப்பாளர், ஆரம்பத்தில் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டதாக, பிரமாண்ட இயக்குனரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கடுப்பான பிரமாண்டம், கடைசியாக படமாக்கிய மூன்று நாள் படப்பிடிப்புக்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.