போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ப்ரியா ஆனந்த், தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தாலும், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். நீண்டகாலமாக அமெரிக்காவில் இருதபோது, தமிழகத்தை பற்றிய அவரின் நினைவுகள் குறித்தும் மற்றும் தன் திரையுலக அனுபவம் குறித்தும் அவர் மனம் திறந்து பேசினார்.
* அமெரிக்காவில், இருந்தபோது எதற்காக ஆசைப்பட்டீர்கள்?
பாவாடை தாவணி, மல்லிப்பூ இதற்கெல்லாம் ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் இதெல்லாம் கிடைக்காது. ஆனால், அதுதான் எனக்கு பிடிக்கும். எப்படா, தமிழ்நாட்டுக்கு போறதுன்னு இருக்கும். கை நிறைய வளையல் போட்டு... கொலுசு போட்டு... சான்சே இல்லை; அந்த சுகமே தனிதான். இப்போ, சென்னையிலே செட்டில் ஆகிட்டேன். அந்த பிரச்னையே இல்லை.
* மழை பாட்டில் பட்டையை கிளப்புறீங்க போல...
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஆடிய பாட்டை தானே சொல்றீங்க. முதல் முறையா, இந்த பாட்டில் தான், நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறேன் என நினைக்கிறேன். கொடைக்கானலில் தான் ஷூட்டில் நடந்தது. நிஜமாகவே அன்னைக்கு செம மழை. 7,000 அடி உயரத்தில் டான்ஸ் ஆடியதை மறக்கவே முடியாது. இந்த படத்தில், கொஞ்சம் ஓவர் கிளமரா ஆடியிருக்கேன்னு தான் நினைக்கிறேன்.
* அதிக சேட்டை, செய்யும் நடிகர் யார்?
கவுதம் கார்த்திக் தான். நான் எந்த அளவு சேட்டை பண்ணுவேனோ, அதை விட அதிகமா சேட்டை பண்ணுவார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, நாங்கள் இருவரும் நண்பர்கள். அதனால், என்னிடம், ஹீரோ என்ற பந்தா எல்லாம் காட்ட முடியாது. நான், பேசிட்டு, கத்திட்டு தான் இருப்பேன். அவன், ரொம்ப சேட்டை, கலாட்டா பண்ணுவான். ஒரு சில நேரங்களில், அவன் செய்யும் சேட்டையை பார்த்து, எனக்கு பயம் கூட வரும்.
* உங்க சீக்ரெட் எல்லாம் யாருக்கு தெரியும்?
என்னுடைய பெஸ்ட் பிரண்ட் விசாகா சிங்கிற்கு என்னைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தெரியும். நான் கேட்டு கொண்டதால், ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தாங்க. என் எல்லா சீக்ரெட்டும் அவங்களுக்கு தெரிந்தாலும், யாரிடம் சொல்ல மாட்டங்க. அந்த அளவுக்கு நம்பிக்கைக்குரிய பிரண்ட்.
* பார்ட்டிக்கு போற பார்ட்டியா நீங்க?
நிச்சயமா இல்லை. எனக்கு, பார்ட்டி போறதே பிடிக்காது. என்னை யாரும், எந்த பார்ட்டிலயும் பார்க்க முடியாது. பிரண்ட்ஸ் கூட, தியேட்டர் போவேன்; ஓட்டல் போவேன், வருவேன். அவ்ளோதான். எனக்கு அதிகமான பிரண்ட்ஸ் இல்லை. இதனால், பார்ட்டிக்கு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நான் உண்டு, வேலையுண்டு என இருக்கிறேன். யார், வம்பு, தும்புக்கும் போவது இல்லை.
* எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க ஆசை?
அப்படி யாரும் இல்லை. அதுபோன்ற ஆசையும் இல்லை. ஹீரோக்களின் பிரபலத்தை வைத்து, நாமும் பிரபலமாகி விடலாம் என நினைக்க மாட்டேன். யாரிடமும் போய் வாய்ப்பும் கேட்டதில்லை. இன்டஸ்ட்ரில எனக்கு, காட் பாதர் யாரும் இல்லை. தமிழ் பேசும் ஹீரோயின் குறைவு. இதனால், எனக்கு வரும் படங்கள் எனக்குதானே வரும்.
* விமல் - சூரியுடன் நடித்த அனுபவம்?
விமலும், சூரியும், 14 ஆண்டு கால நண்பர்கள். இந்த படத்தில் நடிக்க போகும்போது, அவர்களை நினைத்து பயமாக இருந்தது. அறிமுகம் இல்லாத அவர்கள் எப்படி பேசுவார்களோ என்ற தயக்கம் இருந்தது. ஆனா அவங்க நல்லா கலகலன்னு சிரிச்சி பேசி பழக ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க மட்டுமில்லாமல், மற்றவர்களையும் சிரிக்க வச்சிட்டே இருப்பாங்க.
* எப்ப கல்யாணம்...?
யாரைப் பார்த்தாலும், என் கல்யாண விஷயத்தை பற்றித் தான் கேட்கிறாங்க. இன்னும் நான் நடிக்க வேண்டியது நிறைய இருக்குங்க. அதுக்குள்ளே நம்மை பேக்-அப் பண்ணி அனுப்புவதிலேயே எல்லாரும் குறியா இருக்காங்க.