போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மார்ச் 8 உலக மகளிர் தினம். ஆணாதிக்கம் பூட்டிய அடிமை விலங்கிலிருந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுதலையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆணுக்கு சமமாக எல்லாத் துறையிலும் முன்னேறி வருகிறார்கள். ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு செல்வதிலிருந்து ராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்துக்கு செல்வது வரை ஆணுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
மற்ற துறைகளோடு ஒப்பிடும்போது சினிமா துறையில் பெண்களின் பங்கு மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். நடிகை என்பதை தாண்டி சினிமாவில் இயக்குனர்களாக, தொழில்நுட்ப கலைஞர்களாக சாதித்தவர்கள் மிக குறைவு. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமிதான் முதல் பெண் இயக்குனர். அதன் பிறகு பானுமதி தொடங்கி ஸ்ரீப்ரியா வரைக்கும் பல பெண் இயக்குனர்கள் தோன்றினாலும் அவர்களால் ஆண்களுக்கு நிகரான வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் இந்த நிலை மாறும் சூழ்நிலை இப்போது உருவாகி இருக்கிறது.
சவுந்தர்யா ரஜினிகாந்த்
2014ம் ஆண்டு பெண்கள் சினிமாவில் சாதிப்பார்கள் என்கிற நம்பிக்கை கீற்று தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முதல் உதாரணமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இன்று இந்திய திரையுலகமே எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கோச்சடையானின் இயக்குனர். இந்தியாவில் முதன் முறையாக மோசன் கேப்சன் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தனது தந்தையை நடிக்க வைத்து 100 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியாவில் ஒரு பெண்ணை நம்பி இவ்வளவு பெரிய சினிமா ப்ராஜக்ட் நடந்திருப்பது இதுதான் முதல் முறை. இது வெற்றி பெறும் பட்சத்தில் சவுந்தர்யா இந்திய சினிமாவின் முக்கிய இடத்தில் இருப்பார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
அம்மா நடிகையாக அறிமுகமானாலும் ஆரோகணம் படத்தின் மூலம் தனது இயக்குனர் முகத்தைக் காட்டியவர். ஒரு ஏழை பெண்ணின் இறுக்கமான வாழ்க்கையை நெருக்கமாக இருந்து சொன்னவர். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்தவர். தனது அடுத்த படத்தையும் தொடங்கி விட்டார். தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ரோகினி
நல்ல குணசித்திர நடிகையாக அறியப்பட்டவர். நந்தலாலா படத்துக்காக தனது நீண்ட கூந்தலை மழித்து நடித்தவர். சினிமாவை தாண்டி சமூக சேவை தளங்களில் நல்ல பங்களிப்பை செய்து வருகிறவர். அப்பாவின் மீசை என்ற படத்தின் மூலம் இயக்குனராக வருகிறார்.
ஐஸ்வர்யா
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள். இவரது முதல் படமான 3 கமர்ஷியலாக வெற்றி பெறாவிட்டாலும் முதல் படத்திலேயே மெச்சூர்டான ஒரு விஷயத்தை கையாண்ட விதத்தில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றவர். வை ராஜா வை என்று அடுத்த சவாலுக்கு வந்திருக்கிறார்.
நந்தினி
திருதிரு துரு துரு படத்தின் மூலம் வித்தியாசமான காமெடி களத்தில் கதை சொன்னவர். அடுத்து கொலை நோக்கு பார்வை என்று தனது திகில் படத்தை துவக்கி விட்டார்.
மதுமிதா
வல்லமை தாராயோவில் ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை சொன்னவர். அடுத்து கொலை கொலையா முந்திரிக்காவில் கலகலவென சிரிக்க வைத்தார். இப்போது இயக்குனர் கே.பாலச்சந்தர் பற்றி ஆவணப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் மதுமிதா அடுத்த இயக்கப்போவது இந்திப் படத்தை.
சிவாணி
ஐ.டி துறையில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவாணி. சினிமா ஆர்வத்தில் வேலையை தூக்கி போட்டுவிட்டு சினிமா இயக்க வந்து விட்டார். இயக்கும் படத்தின் பெயர் சோன்பப்டி. அம்மா கலைவாணி எழுதிய கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து படமாக்கி வருகிறார்.
சினேகா பிரிட்டோ
எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்தவர். அடுத்து ஒரு புதிய கதையோடு களத்திற்கு வர காத்திருக்கிறார். இருக்கிற பெண் இயக்குனர்களில் வயது குறைந்த இளம் இயக்குனர். இளைய தளபதி விஜய்யின் உறவினர்.
இவர்கள் தவிர இன்னும் பல பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் சாதிக் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.