Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தோல்விகளைக் கண்ட ஹீரோ - உதய்கிரண் மரணம் பற்றி ஸ்பெஷல் ஸ்டோரி!!

07 ஜன, 2014 - 16:53 IST
எழுத்தின் அளவு:

டிஜிட்டில் சினிமாவின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மாதத்துக்கு பத்து புது ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதயகிரண் தற்கொலை சில பாடங்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் உதய்கிரண். பிறப்பிலிருந்தே அழகு. அந்த அழகுதான் அவருக்குள் சினிமா ஆசையை தூண்டியது. உடன் இருந்த நண்பர்களும் அந்த ஆசையை உரம்போட்டு வளர்த்தார்கள். கல்லூரி படிப்பை முடித்ததும் சினிமாவுக்குள் நுழைய ஏதுவாக மாடலிங் செய்ய ஆரம்பித்தார். மாடலிங் உலகில் தனித்த அடையாளத்தோடு வளர்ந்தவர் ஒரு ஆங்கில குறும்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கின் முன்னணி இயக்குனர் தேஜாவின் கவனத்துக்கு வந்தார். அவருடைய இயக்கத்தில் உதய்கிரண் நடித்த சித்திரம். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

ஒரே படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவின் உச்சத்துக்கு போனார். இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளின் கனவு நாயகன் ஆனார். அடுத்து நடித்த நுவ்வு நேனு, மனசந்தே நுவ்வே படங்களும் சேர்ந்து ஹாட்ரிக் ஹிட்டடிக்க கமர்ஷியல் மசாலாவுக்குள் சிக்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை இளைஞர்களின் காதல் களமாக்கினார். நுவ்வு நேனு படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

உதய் கிரணின் இந்த அசுர வளர்ச்சி ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவின் கவனத்தை ஈர்த்தது. அவரை காதலிக்க ஆரம்பித்தார். தன் வீட்டு மருமகனாக்க சிரஞ்சீவியும் விரும்பினார். 2003ம் ஆண்டு தன் மகள் சுஷ்மிதாவுக்கு உதய்கிரணை மணம் முடிக்க நிச்சயம் செய்தார். நிச்சயதார்த்த விழாவும் கோலாகலமாக நடந்தது. இடையில் என்ன நடந்தது என்றே தெரிவில்லை. நிச்சயதார்த்தத்தை முறித்தார் சிரஞ்சீவி. தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயன்றது உதய்கிரணுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு காரணமும், சிரஞ்சீவி மகள் வேறொருவரை காதலித்ததால் இந்த திருமணத்தை ஏற்கவில்லை என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது. மூன்றாவதாக ஒரு காரணமும் இருக்கலாம். எது உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த திருமண நிச்சயதார்த்தமும், அதன் முறிவும்தான் உதய்கிரண் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது.

சிரஞ்சீவியால் நிராகரிக்கப்பட்டதால் அவரை பகைத்துக் கொண்டு யாரும் உதய்க்கு பட வாய்ப்பு தர முன்வரவில்லை. அவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. தெலுங்கில் இனி வாழ முடியாது என்று தமிழ்நாட்டுக்கு வந்தார்.
நேராக கே.பாலச்சந்தர் வீட்டிற்கு சென்ற அவரிடம் தன் சோக கதையை சொல்லி அழுதார். நல்ல வாய்ப்பு வரும்போது அழைப்பதாக சொன்னார். பிரகாஷ்ராஜ் பொய் படத்தை தயாரித்தபோது அதில் உதய்யை ஹீரோவாக்கினார். உதய்யின் துரதிர்ஷ்டம் தமிழ்நாட்டிலும் தொடர்ந்தது.

பொய் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் வம்புசண்ட படத்தில் நடித்தார். அதன் பிறகு, சித்திரம், பெண் சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்றார். இரக்கப்பட்ட சிலர் கொடுத்த வாய்ப்பும் தோல்வியில் முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனஆறுதல் வேண்டி தன் தோழி வஷிதாவை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சொந்த வாழ்க்கை தோல்விகள் துரத்தியது. பாசத்திற்குரிய அம்மாவின் மரணம். அந்த ஈரம் காய்வதற்குள் அப்பா செய்து கொண்ட மறுமணம் எல்லாமே உதயை துரத்தி துரத்தி அடித்தது. இறுதியில் மரணமே எல்லாவற்றும் தீர்வு என்று முடிவு செய்துவிட்டார்.

தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு சம்பவம்தானே தவிர அது முடிவல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த உதய் சினிமா நட்சதிரமானதே சாதனை தானே. அதற்குமேல் என்ன வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் சினிமா கனவோடு திரியும்போது கேமரா முன் நிற்கும் பாக்கியம் பெற்ற அனைவருமே சாதனையாளர்கள்தான். வெற்றி தோல்வி என்பது அடுத்ததுதான். இன்றைக்கு சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு உதய் நடத்தி சென்றுள்ள பாடம் இது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in