போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டிஜிட்டில் சினிமாவின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மாதத்துக்கு பத்து புது ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதயகிரண் தற்கொலை சில பாடங்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் உதய்கிரண். பிறப்பிலிருந்தே அழகு. அந்த அழகுதான் அவருக்குள் சினிமா ஆசையை தூண்டியது. உடன் இருந்த நண்பர்களும் அந்த ஆசையை உரம்போட்டு வளர்த்தார்கள். கல்லூரி படிப்பை முடித்ததும் சினிமாவுக்குள் நுழைய ஏதுவாக மாடலிங் செய்ய ஆரம்பித்தார். மாடலிங் உலகில் தனித்த அடையாளத்தோடு வளர்ந்தவர் ஒரு ஆங்கில குறும்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கின் முன்னணி இயக்குனர் தேஜாவின் கவனத்துக்கு வந்தார். அவருடைய இயக்கத்தில் உதய்கிரண் நடித்த சித்திரம். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
ஒரே படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவின் உச்சத்துக்கு போனார். இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளின் கனவு நாயகன் ஆனார். அடுத்து நடித்த நுவ்வு நேனு, மனசந்தே நுவ்வே படங்களும் சேர்ந்து ஹாட்ரிக் ஹிட்டடிக்க கமர்ஷியல் மசாலாவுக்குள் சிக்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை இளைஞர்களின் காதல் களமாக்கினார். நுவ்வு நேனு படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
உதய் கிரணின் இந்த அசுர வளர்ச்சி ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவின் கவனத்தை ஈர்த்தது. அவரை காதலிக்க ஆரம்பித்தார். தன் வீட்டு மருமகனாக்க சிரஞ்சீவியும் விரும்பினார். 2003ம் ஆண்டு தன் மகள் சுஷ்மிதாவுக்கு உதய்கிரணை மணம் முடிக்க நிச்சயம் செய்தார். நிச்சயதார்த்த விழாவும் கோலாகலமாக நடந்தது. இடையில் என்ன நடந்தது என்றே தெரிவில்லை. நிச்சயதார்த்தத்தை முறித்தார் சிரஞ்சீவி. தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயன்றது உதய்கிரணுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு காரணமும், சிரஞ்சீவி மகள் வேறொருவரை காதலித்ததால் இந்த திருமணத்தை ஏற்கவில்லை என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது. மூன்றாவதாக ஒரு காரணமும் இருக்கலாம். எது உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த திருமண நிச்சயதார்த்தமும், அதன் முறிவும்தான் உதய்கிரண் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது.
சிரஞ்சீவியால் நிராகரிக்கப்பட்டதால் அவரை பகைத்துக் கொண்டு யாரும் உதய்க்கு பட வாய்ப்பு தர முன்வரவில்லை. அவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. தெலுங்கில் இனி வாழ முடியாது என்று தமிழ்நாட்டுக்கு வந்தார்.
நேராக கே.பாலச்சந்தர் வீட்டிற்கு சென்ற அவரிடம் தன் சோக கதையை சொல்லி அழுதார். நல்ல வாய்ப்பு வரும்போது அழைப்பதாக சொன்னார். பிரகாஷ்ராஜ் பொய் படத்தை தயாரித்தபோது அதில் உதய்யை ஹீரோவாக்கினார். உதய்யின் துரதிர்ஷ்டம் தமிழ்நாட்டிலும் தொடர்ந்தது.
பொய் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் வம்புசண்ட படத்தில் நடித்தார். அதன் பிறகு, சித்திரம், பெண் சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்றார். இரக்கப்பட்ட சிலர் கொடுத்த வாய்ப்பும் தோல்வியில் முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனஆறுதல் வேண்டி தன் தோழி வஷிதாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சொந்த வாழ்க்கை தோல்விகள் துரத்தியது. பாசத்திற்குரிய அம்மாவின் மரணம். அந்த ஈரம் காய்வதற்குள் அப்பா செய்து கொண்ட மறுமணம் எல்லாமே உதயை துரத்தி துரத்தி அடித்தது. இறுதியில் மரணமே எல்லாவற்றும் தீர்வு என்று முடிவு செய்துவிட்டார்.
தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு சம்பவம்தானே தவிர அது முடிவல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த உதய் சினிமா நட்சதிரமானதே சாதனை தானே. அதற்குமேல் என்ன வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் சினிமா கனவோடு திரியும்போது கேமரா முன் நிற்கும் பாக்கியம் பெற்ற அனைவருமே சாதனையாளர்கள்தான். வெற்றி தோல்வி என்பது அடுத்ததுதான். இன்றைக்கு சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு உதய் நடத்தி சென்றுள்ள பாடம் இது.