தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

போட்டியிலிருந்து வெளியேறிய மானசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்தும், நடுவர்களை குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்றான 'சூப்பர் சிங்கர் சீசன் 8' தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த நிகச்சியில் மானசி எலிமினேட் ஆகியுள்ளார். தனது இனிமையான குரலால் அதிகமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற மானசி தற்போது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது குறித்து மானசி தனது இண்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம். நான் சொன்னது போல, நான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் அதிகம் மக்களை இதனை மூலம் சம்பாதித்து இருக்கிறேன். என்னுடைய குடும்பம் பெரிதாகி இருக்கிறது. அதற்காக நன்றி மட்டும் சொன்னால் போதாது.
இதற்கு அனுமதி கொடுத்த அப்பா மற்றும் அம்மாவுக்கு முதல் நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்தவர்களுக்கும் நன்றி. ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் என்னை தேர்வு செய்தது எனக்கு கிடைத்த வரம்" என கூறி இருக்கும் அவர் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் நடுவர் அனுராதா ஸ்ரீ ராம் குறித்து, “அவர் என்னுடைய ஏஞ்சல். அவர் எங்களை பார்த்துக் கொள்ளும் விதம், எல்லா போட்டியாளர்களை பேதமின்றி வழி நடத்தும் விதம். அவரது வார்த்தைகளில் இருந்து எனக்கு அதிகம் நம்பிக்கை கிடைத்தது. நான் என்னை நம்பியதை விட அவர் தான் என்னை அதிகம் நம்பினார்” என பதிவிட்டு அனுராதா ஸ்ரீ ராமிற்கு நன்றி கூறியுள்ளார்