லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
படம் : நந்தா
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : சூர்யா, ராஜ்கிரண், லைலா, கருணாஸ்
இயக்கம் : பாலா
தயாரிப்பு : அப்ராஜீத்
சினிமாவில் ஓர் அங்கீகாரத்திற்காக நீண்ட நாள் போராடி கொண்டிருந்த சூர்யாவிற்கு வாழ்வு அளித்த படம், நந்தா. இப்படத்தில் நடிக்க வேண்டியது, அஜித். பாலாவின் கதை சொல்லும் முறையில் திருப்தி இல்லாததால், அவர் விலகினார்.
சேது என்ற தன் முதல் படத்திலேயே, தேசிய அளவில் கவனத்தை பெற்ற பாலா, நந்தா படத்தின் கதையை, இலங்கை அகதிகள் பிரச்னை வழியே முன்னெடுத்து சென்றார். சிறுவயதில் தந்தையை கொலை செய்து, சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் நந்தா, தன் தாயின் பாசத்திற்கு ஏங்குகிறார். நந்தாவை, அப்பகுதி பெரியவரான ராஜ்கிரண் வளர்க்கிறார். இதற்கிடையில் ராஜ்கிரண் கொலை செய்யப்பட, அவரை கொன்றவனை, நந்தா பழிவாங்குகிறான். ஆனால், கொலைகாரனாக இருக்கும் தன் மகனை, தாயே விஷம் வைத்து கொல்கிறார். இது தான், படத்தின் கதை.
பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் நபருக்கு, சூர்யா கொடுக்கும் தண்டனை, தியேட்டரில் கைத்தட்டலை பெற்றது. பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்க, சிவாஜி கணேசனை பார்த்து, நடுநடுங்கியபடியே கதை சொல்லி, அவரின் ஆளுமைக்கு பயந்து ஓடி வந்ததை, பாலாவே சொல்லியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்தார். இதன் மூலம் ராஜ்கிரண், 'ரீ என்ட்ரி' ஆனார்.
'லொடுக்கு பாண்டி' கதாபாத்திரம் வழியாக, நாட்டுப்புற பாடகராக இருந்த கருணாஸ், காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். அகதி பெண் கல்யாணியாக லைலா, சிறப்பாக நடித்திருந்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், 'எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய், கள்ளி அடி கள்ளி, முன் பனியா...' பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 'பாலாவின் படம்' என்ற ராஜபாட்டை, இப்படத்திலிருந்து விரியத் துவங்கியது.
மறுபடியும் கோபத்தோடு வாருங்கள் பாலா!