ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தேன்மொழி பி.ஏ ஊராட்சி தலைவி. இதில் கலக்கபோவது யாரு புகழ் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் ஒளிப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் ரெக்க கட்டி பறக்கிறது. ஆனால் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18ந் தேதி முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று சீரியலில் நடித்து வரும் ஸ்டெபி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: எல்லோரும் எனக்கு மெசேஜ் செய்து தேன்மொழி பி.ஏ சீரியல் நிறுத்தப்பட்டு விட்டதா என கேட்கிறார்கள். சீரியல் நிறுத்தப்படவில்லை, ஒரு சில காரணங்களால் ஒளிபரப்பாகாமல் உள்ளது. 18 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.