காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தேன்மொழி பி.ஏ ஊராட்சி தலைவி. இதில் கலக்கபோவது யாரு புகழ் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் ஒளிப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் ரெக்க கட்டி பறக்கிறது. ஆனால் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18ந் தேதி முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று சீரியலில் நடித்து வரும் ஸ்டெபி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: எல்லோரும் எனக்கு மெசேஜ் செய்து தேன்மொழி பி.ஏ சீரியல் நிறுத்தப்பட்டு விட்டதா என கேட்கிறார்கள். சீரியல் நிறுத்தப்படவில்லை, ஒரு சில காரணங்களால் ஒளிபரப்பாகாமல் உள்ளது. 18 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.




