ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு புதிய சீரியல்களை தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறது விஜய் டி.வி. அந்த வரிசையில் கடந்த திங்கட் கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் பாவம் கணேசன்.
இதில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நவீன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நேகா கவுடா, ஆனந்த் பாண்டி, மீனாட்சி முரளி, சயம்யுக்தா உள்பட பலர் நடிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பாவம் கணேசனின் கதை இதுதான் : குடும்பத்திற்காக தன் சந்தோஷத்தை மறந்து அதிகம் உழைக்கும் ஒரு இளைஞரை பற்றியது தான் கதை. தனது பெரிய குடும்பத்தை தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார் கணேசன். பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜென்ட், வாடகைக்கு வீடு பார்த்து கொடுக்கும் புரோக்கர் தொழில் வரை அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
கணேசனுக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கை மற்றும் ஒரு அக்கா இருக்கின்றனர். அக்கா திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டாலும் அவளும் கஷ்டமான ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறாள். ஒரு தங்கை நர்ஸ் ஆவதற்காக படித்து கொண்டிருக்கிறார். தம்பி ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். கணேசனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவரது அப்பா விட்டுச் சென்ற வீடு மட்டும்தான். அதற்கும் உள்ளூர் பெண் தாதா மூலம் பிரச்சினை வருகிறது. பிரச்சினைகளை சமாளித்து கணேசன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.