டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தேன்மொழி பி.ஏ ஊராட்சி தலைவி. இதில் கலக்கபோவது யாரு புகழ் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் ஒளிப்பாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் ரெக்க கட்டி பறக்கிறது. ஆனால் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 18ந் தேதி முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று சீரியலில் நடித்து வரும் ஸ்டெபி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: எல்லோரும் எனக்கு மெசேஜ் செய்து தேன்மொழி பி.ஏ சீரியல் நிறுத்தப்பட்டு விட்டதா என கேட்கிறார்கள். சீரியல் நிறுத்தப்படவில்லை, ஒரு சில காரணங்களால் ஒளிபரப்பாகாமல் உள்ளது. 18 ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.