டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. மாடலிங்கில் இருந்த லாவண்யா, விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் மூலம் நடிக்க வந்தார். அந்த தொடருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் சீக்கிரமே நிறைவுற்றது. இந்நிலையில், அடுத்த வாய்ப்பிற்காக காத்திருந்த அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே, வீஜே சித்ரா, காவ்யா அறிவுமணி என இரண்டு நடிகைகள் நடித்திருப்பதால் முல்லை கதாபாத்திரம் லாவண்யாவுக்கு செட்டாகாது என பலரும் நெகட்டிவாக பேசி வந்தனர். ஆனால், புதிய முல்லையாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் கட்சிதமாக செட்டாகி மக்களிடம் பிரபலமாகிவிட்டார்.
மேலும், அவர் தற்போது 'ரேசர்' என்கிற புதிய படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் லாவண்யாவின் குடும்பத்தினர் முதலில் லாவண்யாவை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும், இதனால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்காக தான் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் குறித்தும் லாவண்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.




