ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

என்னதான் முன்னணி சேனல்கள் பல இருந்தாலும் மக்களின் ரசனை அறிந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டி.வி. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வேறு பெயரில் ஒளிபரப்பும். கோடீஸ்வரன், பிக் பாஸ் உள்ளிட்ட சர்வதேச நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது விஜய் சேனல். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வரிசையில் அடுத்து வரும் புதிய நிகழ்ச்சி ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா?. புஷ்பா படத்தின் புகழ்பெற்ற பாடலின் வரியையே தலைப்பாக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியை மா.பா.கா ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளர் வைக்கும் பணத்தை விட எதிரில் ஆடுகிறவர் அதிகமான தொகையை வைக்க வேண்டும். அவர் அதை ஏற்க மறுத்தால் மேலும் தொகையை வைக்க வேண்டும். இப்படி போகும் இந்த விளையாட்டு. இந்த புதிய கேம் ஷோம் வருகிற (செப்டம்பர்) 4ம் தேதி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




