ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
'பூவே உனக்காக' சீரியலில் பூவரசி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கன்னடத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எதுவும் வெற்றி படமாக அமையவில்லை.
அதன்பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு 'நாதிரு தின்னா' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்ததால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் ராதிகா ப்ரீத்தி சின்னத்திரையை தேர்ந்தெடுத்தார். ராதிகாவின் அழகிய தோற்றம் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. இன்றைய நாளில் அதிக அளவு ரசிகர்களை கொண்ட சீரியல் நடிகைகளில் ராதிகா ப்ரீத்தியும் ஒருவர்.
சமீபத்தில் பூவே உனக்காக தொடரை விட்டு விலகிய ராதிகா ப்ரீத்தி சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், தமிழில் அவர் நடித்திருந்த 'நாதிரு தின்னா' திரைப்படம் வெளியாவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தது. படம் ரிலீஸான பிறகு சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. தற்போது ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ள 'நாதிரு தின்னா' திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.