சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத், பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அனிதா சம்பத், ‛வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு. இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும், நிறைய உழைப்பும், நிறைய மெனக்கெடல்களும் கடந்து சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.' என பதிவிட்டுள்ளார்.