தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

கலர்ஸ் தமிழ் சேனலில் 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரச்சிதா மஹாலெட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். கணவர் இறந்து விட்ட நிலையில், ஒற்றை பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க பாடுபடும் ஒரு தாயின் போராட்டமாக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதில் ஹீரோவாக யார் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வந்தனர். தற்போது இதில் பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய் முன்னதாக 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர். இருந்தாலும் அமுல் பேபி என்ற பட்டப்பெயருடன் அவர் அதிகமாக பிரபலமானது ஜீ தமிழின் சத்யா சீரியலில் தான். தற்போது சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் விஷ்ணு தான் ஹீரோ. ஆனால் அந்த முதல் சீசனை போல் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் விஷ்ணு சத்யா 2 சீரியலை கைவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சொல்ல மறந்த கதை வருகிற மார்ச் 7 முதல் இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.




