‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் திறக்கவிருந்த புதிய மளிகை கடையை திறக்கவிடாமல் சிலர் சதி செய்கின்றனர். பல போராட்டங்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கடையை மீட்டு திறக்கின்றனர். இந்த சந்தோஷமான நிகழ்வை கொண்டாடும் விதத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் மது அருந்துவதோடு, வீட்டில் சென்று ரகளை செய்கிறது. இந்த எபிசோடு செம காமெடியாக சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் அதில் நடித்த வெங்கட்டையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்த வெங்கட்டை நீங்கள் உண்மையாகவே குடிச்சீங்களா? என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த காட்சி உருவாக்கப்பட்ட விதத்தை வீடியோவாக வெங்கட் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், நான் ஒரு டீ டோட்டலர். சைட் டிஸ் மட்டுமே சாப்பிடுவேன். அந்த காட்சிக்காக கண்களை தேய்த்து தேய்த்து நடித்தேன். இதனால் கண் வலி வந்தது. ஆனாலும், அது வொர்த் தான் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அனைவரும் வெங்கட்டின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.