பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரச்சிதா மஹாலெட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். கணவர் இறந்து விட்ட நிலையில், ஒற்றை பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க பாடுபடும் ஒரு தாயின் போராட்டமாக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதில் ஹீரோவாக யார் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வந்தனர். தற்போது இதில் பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய் முன்னதாக 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர். இருந்தாலும் அமுல் பேபி என்ற பட்டப்பெயருடன் அவர் அதிகமாக பிரபலமானது ஜீ தமிழின் சத்யா சீரியலில் தான். தற்போது சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் விஷ்ணு தான் ஹீரோ. ஆனால் அந்த முதல் சீசனை போல் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் விஷ்ணு சத்யா 2 சீரியலை கைவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சொல்ல மறந்த கதை வருகிற மார்ச் 7 முதல் இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.