‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
தமிழ் திரையுலகில் 80, 90 களில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் மூலம் அறிமுகமான அவர் தனது எதார்த்த நடிப்பினால் சிறந்த நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் அவ்வப்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் தோன்றி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ரேகாவுக்கு மீண்டும் திரை வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து போட்டோஷூட்களை பதிவிட்டு வந்த ரேகா, சமீபத்தில்ல் தனது ஒரே மகளை பார்க்கமுடியவில்லை என வருத்தமாக போஸ்ட் போட்டிருந்தார்.
இதனையடுத்து ரேகா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ரேகாவின் முகஜாடையில் அழகாக இருக்கும் அவரது மகளின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஹார்டின்களை அள்ளிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் ரேகாவின் மகள் நடிக்க வருகிறாரா? என ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால், வெளிநாட்டில் தங்கி படித்து, அங்கேயே வேலையும் பார்த்து வரும் ரேகாவின் மகளுக்கு நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிய வருகிறது. இதையறிந்த நெட்டிசன்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோயின் மிஸ்ஸிங் என பீல் செய்து வருகின்றனர்.