டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவிற்கும் திருமணமாகி ஏற்கனவே அய்லா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆல்யா பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டீர்களா? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தையாக இருந்தால் லைலா, ஆண் குழந்தையாக இருந்தார் அர்ஸ் என பெயர் வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆல்யா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். முன்னதாக பிரசவம் காரணமாக ஆல்யா சீரியலை விட்டு விலகுவாரா? என்ற ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா, சீரியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் என பதிலளித்திருந்தார். ஆல்யாவின் ரசிகர்கள் அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்காக வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.