துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரலாக கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த குரலும் ஒரு காரணம். முதல் நான்கு சீசன்களின் போதும் பிக்பாஸின் குரலாக ஒலிப்பது யாருடைய குரல் என்று யாருக்குமே தெரியாது. நான்காவது சீசனின் முடிவில் தான் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற தகவல் வெளியிடப்பட்டது. தமிழில் ஒளிபரப்பான 5 சீசனுக்குமே பிக்பாஸுக்கு குரல் கொடுத்தவர் சாஷோ என்ற வாய்ஸ் ஆர்டிஸ்ட் தான்.
டப்பிங் ஆர்டிஸ்டாக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட்டிலும் கலக்குவார், அவ்வப்போது போட்டியாளர்களை கலாய்த்தும், தேவையான சமயம் ஆறுதல் சொல்லியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அவர் சம்பளம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு சாஷோவுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் சாஷோ தான் குரல் கொடுக்கவுள்ள நிலையில், அதில் அவருக்கு தொகை பெரிய சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.