டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முந்தைய பிக்பாஸ் சீசன்களே ஒப்பிடும் போது சீசன் 5 பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை. ரசிகர்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வண்ணம் படக்குழுவினர் பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரத்குமார் என்ட்ரீ கொடுத்துள்ளார். டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குக்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட தொகையுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஆப்சன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். இம்முறை அந்த டாஸ்க்கில் சரத்குமார் பெட்டியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது, 'போட்டி என்றால் வெற்றி தோல்வி இருக்கும். இந்த பெட்டியில் 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம். அது உங்கள் முடிவு.
ஆனால், அந்த முடிவு எடுக்கும் போது கவனம் தேவை. இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா என்பதை யோசித்து முடிவெடுங்கள்' என்றுகூறி அந்த பணப் பெட்டியை வைத்து செல்கிறார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.




