காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நுழைந்தவர் அமீர். அவரை பற்றி பலருக்கும் தெரியாது. பிரபல நடன இயக்குநரான அமீர் சமீபத்தில் நடைபெற்ற பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு பிக்பாஸ் கதவுகள் திறக்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் வீட்டில் காதல் சிறகடித்து பறந்து வரும் அமீர் பற்றி பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். அவரை பற்றி சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
அமீர் தனது 16 வயதிற்குள்ளாகவே தாய் - தந்தையரை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை அஷ்ரப் என்பவர் தான் பொறுப்புடன் வளர்த்தார். சிறுவயதில் ஆர்மியில் சேர வேண்டும் என விருப்பம் கொண்ட அமீர் அதற்காக எவ்வளவோ முயற்சி செய்து பாதுகாப்புத் துறைக்கு படித்தார். ஆனால், அவரால் ஆர்மியில் தேர்வு பெற முடியவில்லை. நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாகத்தான் தேசியக் கொடியை அவரது கைகளில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
ஆர்மியை தவிர டான்ஸிலும் அதிக ஈடுபாடு கொண்ட அமீர், பிரபுதேவாவின் தீவிர ரசிகர். அதன்பின் நடனம் கற்றுக்கொண்ட அமீர் இன்று ஏடிஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக்குழுவை ஆரம்பித்துள்ளார். அந்த குழு இந்திய அளவில் பல நடன போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
பிக்பாஸில் அமீர் செய்யும் சேட்டைகள் சிலரை கடுப்பேற்றியும் சிலரை கவர்ந்தும் வருகிறது. ஆனால், அவருடைய வாழ்க்கை கதை பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.




