பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கொரோனாவால் மரணிக்கும் திரைப்பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்று(ஜூன் 17) தொரட்டி படம் நாயகன் ஷமன்மித்ரு (வயது 43) காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான ஷமன்மித்ரு தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 5 வயதில் மோக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கே.வி.ஆனந்த், மாறன், சேலம் சந்திரசேகர், பாண்டு, குட்டி ரமேஷ், நிதிஷ் வீரா, வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் மரணம் அடைந்த நிலையில் இப்போது இவரின் மரணமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.