பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

கொரோனா தொற்று பரவலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. இதனால் நோயை கட்டுப்படுத்த அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் சினிமாத்துறையில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இனிமேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திரையுலகினர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், ரஜினிகாந்த், நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேசும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.