லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட தீவிரமாக பரவிக்கொண்டு வருவதால் சினிமாத் துறையினர் முன்பை விட அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தான் கமிட்டான படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழில் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெகபதிபாபு, ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், சித்தார்த்-சர்வானந்த் நடிப்பில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் மகாசமுத்ரம் படத்தில் வில்லனாக நடித்து வந்தார் ஜெகபதிபாபு.
ஆனால் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடந்து வரும் நிலையில், தன்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ள அழைத்தபோது கொரோனா தொற்றை முன்வைத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று தயாரிப்பாளர்களின் கோரிக்கை நிராகரித்து விட்டாராம் ஜெகபதிபாபு. அதேபோல் தான் நடிக்கும் மற்ற படங்களின் படப்பிடிப்புகளிலும் கொரோனா அலை ஓய்ந்த பிறகே நடிப்பேன் என்றும் ஜெகபதிபாபு கூறிவிட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.