'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி இயக்கியுள்ள படம் இது என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் கண்டா வரசொல்லுங்க பாடல் சூப்பர் ஹிட்டானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கர்ணன் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தனது பேச்சை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், "உங்களோடு இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கும், கொண்டாடும் நிறைய பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள்.
இந்த படம் எனக்கு ஒரு நடிகனாக, மனிதனாக நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. மாரி செல்வராஜின் உறுதியும், அவரோட மனிதாபிமானமும் தினம் தினம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு மனிதன் மாரி செல்வராஜ் மாதிரி நல்ல மனிதாபிமானம் உள்ளவராக இருக்க முடியமா என்று நான் அவ்வப்போது யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனாக மாற்றியதற்கும், என் வாழ்க்கையில் வந்ததற்கும் நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திருக்கிறது.
கர்ணன் உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என நம்புகிறேன். கர்ணன் வருவான். சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்", என தனுஷ் கூறியுள்ளார்.




