22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரானோ பாதிப்பும் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் தங்களது 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். அடுத்து ஹிந்தியிலும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
லைக்கா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் படத்திற்காக போடப்பட்டட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும் பாக்கியாக உள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்,” என்றும் கேட்கப்பட்டதாம்.
ஆனால், ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.