இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரானோ பாதிப்பும் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் தங்களது 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். அடுத்து ஹிந்தியிலும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
லைக்கா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் படத்திற்காக போடப்பட்டட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும் பாக்கியாக உள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்,” என்றும் கேட்கப்பட்டதாம்.
ஆனால், ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.