எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரானோ பாதிப்பும் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் தங்களது 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். அடுத்து ஹிந்தியிலும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
லைக்கா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் படத்திற்காக போடப்பட்டட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும் பாக்கியாக உள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்,” என்றும் கேட்கப்பட்டதாம்.
ஆனால், ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.