கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், 'தோழா' பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “சுல்தான்' படத்தில் நடிக்கும் போது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆனாலும், தமிழில் எனது அறிமுகப்படம் என்பதால் கொஞ்சம் உற்சாகமாகவும், பயமாகவும் உள்ளது. இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 5ம் தேதி எனது பிறந்தநாள். 'சுல்தான்' வெற்றிதான் எனது பிறந்த நாள் பரிசாக அமையும்,” எனப் பேசினார்.
அந்த பிறந்தநாளை பரிசை ரசிகர்கள் தருவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.