ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், 'தோழா' பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “சுல்தான்' படத்தில் நடிக்கும் போது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆனாலும், தமிழில் எனது அறிமுகப்படம் என்பதால் கொஞ்சம் உற்சாகமாகவும், பயமாகவும் உள்ளது. இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 5ம் தேதி எனது பிறந்தநாள். 'சுல்தான்' வெற்றிதான் எனது பிறந்த நாள் பரிசாக அமையும்,” எனப் பேசினார்.
அந்த பிறந்தநாளை பரிசை ரசிகர்கள் தருவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.