டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கார்த்தி, ராஷ்மிகா, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், 'தோழா' பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “சுல்தான்' படத்தில் நடிக்கும் போது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆனாலும், தமிழில் எனது அறிமுகப்படம் என்பதால் கொஞ்சம் உற்சாகமாகவும், பயமாகவும் உள்ளது. இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 5ம் தேதி எனது பிறந்தநாள். 'சுல்தான்' வெற்றிதான் எனது பிறந்த நாள் பரிசாக அமையும்,” எனப் பேசினார்.
அந்த பிறந்தநாளை பரிசை ரசிகர்கள் தருவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.