காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நயன்தாராவைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதென செய்திகள் பரவி வருகின்றன. அது குறித்து இருவருமே எந்த ஒரு மறுப்பையும் வெளியிடவில்லை.
அவர்களது காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. இரு வீட்டாரும் ஏற்கெனவே சம்மதம் சொல்லிவிட்டனர். நயன்தாரா 36 வயதைக் கடந்துவிட்டார். எனவே, இனிமேலும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாமென நயன்தாரா நினைக்கிறாராம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவாவைக் காதலித்த போது இந்து மதத்திற்கு மாறினார். காதலர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கும் சென்று வந்தார். அவர்களது திருமணம் எந்த முறைப்படி நடக்கும், எங்கு நடக்கும் என்பது குறித்தும் முடிவெடுத்துவிட்டார்களாம். விரைவில் அவர்களது திருமணத் தேதி பற்றி அறிவிப்பு வெளியிடலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




