300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் , சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதற்காக வெற்றி மாறனுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து தாணு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியிருப்பதாவது: தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே படம் இயக்கும்போது விருதுகளுக்காக இயக்குவதில்லை. அந்தப் படத்தின் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வழங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பது தான் முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிக முக்கியமானது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றிருப்பதிலும் மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கேரக்டரில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை ரொம்ப இலகுவாக நடித்தது ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.