மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் உறியடி. இதனை விஜய்குமார் என்ற இளைஞர் தயாரித்து, இயக்கி இருந்தார். அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். கல்லூரி மாணவர்களிடம் எப்படி ஜாதி வெறியும், மத வெறியும் புகுத்தப்படுகிறது என்பதை சொன்ன படம். பல விருதுகளை பெற்றது. ஆனாலும் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை.
விஜய் குமார் உறியடியின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதிக் கொண்டு தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்தார். சமீபத்தில் சூர்யாவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். அது சூர்யாவுக்கு பிடித்து விடவே தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் குமார் தான் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த மைம்கோபி, சந்த்ரு குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். மலையாள நடிகை விஸ்மயா இதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தாதா 87 படத்திற்கு இசை அமைத்து வரும் கோவிந்த் மேனன் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்புகள் குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடக்கிறது. இதுப்பற்றிய முறையான அறிவிப்பை 2டி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது. சூர்யா, கார்த்தி, ஜோதிகாக நடிக்காமல் முழுக்க முழுக்க வெளி ஆட்களை கொண்டு 2டி நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.