பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கலை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும் அவர் மரணம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அவர் மரணம் குறித்து தீவிரமான விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். புரியாத புதிர்களாக சில கேள்விகள் முளைத்துள்ளன.
உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கும் ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதை அவர் தீவிரமாக எதிர்த்து வந்தவர். அப்படிப்பட்டவர் எப்படி மது அருந்தினார். அவராக அருந்தினாரா, அல்லது வற்புறுத்தி மது அருந்த வைக்கப்பட்டாரா? அவராக விரும்பி அருந்தியதாக வைத்துக் கொண்டால் எப்படி திடீரென அந்த பழக்கத்திற்கு ஆளானார்?
ஸ்ரீதேவி குளியல் அறைக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது மாலை 6.25 மணிக்கு. அவர் இறந்து விட்டதாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது இரவு 9 மணிக்கு. துபாய் சட்டதிட்டத்தின்படி சிறிய விபத்து என்றாலும் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தனை கால தாமதம் ஏன்?
ஸ்ரீதேவி தங்கியிருந்தது 7 நட்சத்திர ஓட்டல். அந்த ஓட்டலுக்கென்று தனி மருத்துவ குழு உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த குழுவிரை அணுகாமல் உடனடியாக வெளி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது ஏன்?
நீரில் மூச்சு திணறி இறந்தவரை மாரடைப்பால் இறந்தார் என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இதுபோல இன்னும் சில கேள்விகளும் உள்ளன. துபாய் காவல்துறையினர். உண்மையான, விரிவான பதில் தருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.