2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

நடிகை குஷ்புவின் கணவரான, இயக்குனர் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே அப்படத்திலிருந்து தான் விலகுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சுந்தர்.சி. அதையடுத்து அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே குஷ்புவின் சோசியல் மீடியாவில் சிலர் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருவர் சுந்தர். சியின் பரிதாபகரமான கதை விவரிப்பு காரணமாக ரஜினியும், கமலும் உங்கள் கணவரை தாங்கள் தயாரிக்கும் படத்திலிருந்து வெளியேற்றி விட்டதாக கேள்விப்பட்டோம். அப்படியானால் இந்திய திரையுலகம் உங்கள் கணவர் சுந்தர்.சியை குப்பை தொட்டியில் போட வேண்டிய நேரமா? என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, தனது எக்ஸ் பக்கத்தில், என் செருப்பு சைஸ் 41. அடி வாங்க தயாரா? என்று ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.