தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சிவகுமார் போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர் சத்யராஜ். சிவகுமாரின் உறவினரும்கூட. ஆரம்பத்தில் சிவகுமாரின் சிபாரிசில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ், பின்னர் வில்லன் வேடங்களில் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
வில்லனாகவே நடித்து வந்த அவரை ஹீரோவாக்கிய படம் 'சாவி'. கார்த்திக் ரகுநாத் என்பவர் இயக்கிய இந்த படம் 'டயல் ய மர்டர்' என்ற அமெரிக்க படத்தின் தழுவல். இந்த கிரைம் திரில்லர் படத்தில் சத்யராஜுடன் சரிதா, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, கவுண்டமணி, அனுராதா, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.
முன்னாள் டென்னிஸ் வீரரான சத்யராஜ், சமூக ஆர்வலரும், பணக்கார பெண்ணுமான சரிதாவை காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் சரிதா சகஜமாக எல்லா ஆண்களுடன் பழகுகிறவர் என்பதால் அவர்களில் யாராவது ஒருவர் மீது சரிதாவுக்கு காதல் வந்து விட்டால் என்ன ஆகும் என சந்தேகம் கொள்ளும் சத்யராஜ், சரிதாவுடன் நெருங்கி பழகும் ஆண்களை பழி வாங்குவது மாதிரியான கதை. படம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. சத்யராஜின் நடிப்பு பேசப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.