ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

சினிமா தொடங்கிய காலத்தில் வசனங்கள் பாடல்களாகவே இருந்தது. பின்னர் நீட்டி முழக்கி கவிதையாக பேசினார்கள். பின்னர் பக்கம் பக்கமாக பேசினார்கள். பின்னர் சாதாரண தமிழில் பேசினாலும் வளவளவென பேசினார்கள். இந்த பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு 'நறுக்' வசனங்களால் உருவான படம் 'பகல்நிலவு'.
மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ் படம். ஊரையே ஏமாற்றி வெளியில் நல்லவன் வேஷம் போடும் வில்லன் சத்யராஜை எதிர்த்து ஹீரோ முரளி மக்களை திரட்டி போராடுகிற சாதாரண கதைதான்.
ஆனால் இளையராஜாவின் இசை, ராமச்சந்திர பாபுவின் ஒளிப்பதிவு, பி.லெனின் எடிட்டிங் இவற்றோடு சேர்ந்து நறுக் வசனமும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதனால் தன்னுடைய எல்லா படத்திலும் நறுக் வசங்களையே பயன்படுத்தினார் மணிரத்னம். 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு இந்த பாணியை மாற்றிக் கொண்டார்.




