பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றார். சினிமாவிற்கு இசை அமைப்பதோடு, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பல ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களையும் நிர்வகித்து வருகிறார். சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார், இளைய மகள் சமையல் கலை நிபுணராக உள்ளார். மகன் தந்தையை போல இசை உலகில் இருக்கிறார். மனைவியை பிரிந்தார்.
இந்த நிலையில் அதிக வேலை பளுவின் காரணமாக தன்னால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் வாழ்க்கை இழந்து விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் பல திட்டங்களை தீட்டி செயல்படுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக அவை முடியாமல் போகலாம். நானும் அப்படித்தான். என்னை பொறுத்தவரை, எதைப்பற்றியும் யோசிக்காமல் காலத்தின் போக்கிலேயே, நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
முன்பெல்லாம் வெறி பிடித்தவன் போல இரவு, பகல் பாராமல் வேலை செய்தேன். அப்படி அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். அந்தவகையில் இப்போது என் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.