தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அதையடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 46வது படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் கம்போசிங் பணிகளை தொடங்கி விட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''என்னை பொருத்தவரை ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். அப்படித்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் நடித்ததோடு இசையும் அமைத்தேன். அதன் பிறகு 'மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி' என மூன்று படங்களுக்கு இசையமைத்தேன். அந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றன. அதேபோல்தான் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி, லக்கி பாஸ்கர்' போன்ற படங்களுக்கும் இசையமைத்தேன். இப்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படத்திற்கும் இசையமைக்கிறேன்.
இந்த படமும் முந்திய இரண்டு படங்களை போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கான ஒரு பாடலை தற்போது கம்போஸ் செய்து முடித்து விட்டேன். அந்த பாடல் பயங்கரமா வந்திருக்கு. கண்டிப்பாக இந்த பாடல் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்'' என்று கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.