தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'அஞ்சாதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஜ்மல் அமீர். தொடர்ந்து வெற்றிச்செல்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள், நுங்கம்பாக்கம், நெற்றிக்கண் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் உடன் 'கோட்' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மீது 'சினம்' ,'உயிர் வரை இனித்தாய்' போன்ற படங்களில் நடித்துள்ள நர்வினி டெரி ரவிசங்கர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : எனது நண்பருடன் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் என்னிடம் வந்து, 'நான் எனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா?' என்று கேட்டார். மறுநாள் நான் ஆடிஷனுக்கு அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
அவருடன் நடனம் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான், முடியாது என்று சொன்னேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ ஒருவர் காலிங்பெல்லை அழுத்தினார். அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்க கூடாது. அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது.
சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர். அதனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.