காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ட்ரெயின், ஏஸ், பாண்டிராஜ் இயக்கும் படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்து தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கும் படத்திலும் அவர் நடிக்கப் போகிறார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், சமீபகாலமாக பூரி ஜெகநாத் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், இது போன்று தோல்வி பட இயக்குனர்களின் படங்களை தேர்வு செய்கிறாரே என்று அந்த நெட்டிசன் பதிவு போட்டுள்ளார்.
இதையடுத்து அதற்கு விஜய் சேதுபதி தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்காத நிலையில், நடிகர் சாந்தனு எக்ஸ் பக்கத்தில் அந்த நெட்டிசனுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், யாரைப் பற்றியும் இதுபோன்று அவதூறாக பேச வேண்டாம். பொது வெளிவில் வார்த்தைகளை கவனவாக பேசுங்கள். பூரி ஜெகநாத் என்பவர் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும். சகட்டுமேனிக்கு யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் சாந்தனு.




