சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிலும் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி பாலிவுட்டிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படமும் வெற்றி படமாக அமைந்துவிட்டால் பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு என ஒரு நிலையான இடம் கிடைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
வரும் மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் உங்களுடைய மிகப்பெரிய பயம் எது என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா கூறும்போது, “மிக உயரமான இடங்களும் ஆழமான தண்ணீர் பகுதியும் எனக்கு எப்போதுமே பயம் தருபவை” என்று கூறியுள்ளார்.